Monday, January 12, 2009

தமிழீழம்


நேற்றொரு கிழக்குத் தீமோர் இன்றொரு கொசோவா நாளை எம் தமிழீழம் என்பதை நீ நம்புக ! இது ஒன்றும் கற்பனையின் வரியல்ல காலத்தின் பதிவாகி எம் தேசத்து வரலாறாய் வருகின்ற நாட்களில் நிச்சயம் பதிவாகும் ! பதிவாக நாமெல்லாம் ஒன்றாக ஒருகொடியில் நன்றே நாம் திரண்டாலே நாளை இவ்வுலகை நம் கையில் தானெடுத்து எங்கள் துயர்மாற்றி எல்லைகளை தொடலாமே ! விடுதலை என்பதொன்றும் கடுகதியாய் கிடைக்காது எம் காவலனின் காலமதில் தமிழீழமது பதிவாகும் ! தமிழீழம் பதிவாக தக்கதொரு பங்காற்ற புலத்துத் தமிழர்களும் உலகத் தமிழர்களும் ஒன்றாக கை கோர்த்து உலகில் எமக்கான ஒரு நாட்டை அமைப்போமே ! தன் மானத் தமிழினமே மண் மானம் காப்பதுவே மகத்தான கடைமையன்றோ

No comments: